search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீளமேடு பெண் நகை பறிப்பு"

    பீளமேட்டில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    கோவை:

    கோவை பீளமேடு கருப்பராயம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கலைச்செல்வி(வயது 28). இவர் சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் சென்றார்.

    தொட்டிப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×